இணையச் சேவை பாதிப்பால் கார் நிறுத்துடமிடத்திலும் தடங்கல்!!

இணையச் சேவை பாதிப்பால் கார் நிறுத்துடமிடத்திலும் தடங்கல்!!

சிங்கப்பூர்: உலகளாவிய இணைய சேவை பாதிப்பால் பல்வேறு இடங்களில் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் மக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இணையதள சேவை தடைபட்டதால் குடியிருப்புகளில் உள்ள 185 வாகன நிறுத்துமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள மாற்றுப்பாதைகள் வழியாக வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்குள் நுழைவதை எளிதாக்கியுள்ளன என்று மாநகராட்சி குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட நுழைவாயில்களும் திறக்கப்பட்டதாக கூறியது.

இதனால் சிரமங்களை சமாளிக்க கழக ஊழியர்கள் நேரடி சேவை வழங்குவதற்காக வாகன நிறுத்தும் இடங்களுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

தற்போது சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இடையூறுக்கு சங்கம் சார்பாக மன்னிப்புகளையும் கேட்டுக் கொண்டது.