புருவம் கருகருன்னு அடர்த்தியா வளர ஆசையா..??? அப்போ இத பாலோ பண்ணுங்க...!!!

ஆண்கள் பெண்கள் என இருவரும் தங்களது புருவம் அடர்த்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் அடர்த்தியான புருவங்கள் இருந்தால் பியூட்டி பார்லர்களில் த்ரெட்டிங் செய்யும் பொழுது நேர்த்தியான அழகுடன் இருக்கும் என்று நினைப்பார்கள். லேசான புருவங்கள் இருந்தால் த்ரெட்டிங் செய்யவே முடியாது.இதுவே அடர்த்தியான புருவங்கள் இருந்து த்ரெட்டிங் செய்தால் அது தனித்துவமான அழகை கொடுக்கும்.இதற்காக சில பெண்கள் தங்களது புருவம் அடர்த்தியாக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. ஆண்கள் பெண்கள் என யாராக இருந்தாலும் தங்களது புருவ அடர்த்தியை அதிகரிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி பயனடையலாம்.
தீர்வு 1:-
1) சின்ன வெங்காயம் – இரண்டு
2) தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும்.
பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.
இந்த வெங்காயச் சாற்றுடன் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை புருவங்களில் தடவி வந்தால் அடர்த்தி அதிகரிக்கும்.
தீர்வு 2:-
1) கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2) தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றவும். அடுத்து, ஒரு சிறிய துண்டு கற்றாழையிலிருந்து ஜெல்லைப் பிரித்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
இந்த கற்றாழை விழுதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து புருவத்தில் தடவி வந்தால், மெல்லிய புருவங்கள் அடர்த்தியாக வளரும்.
தீர்வு 3:-
1)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று
2) தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தை எடுத்து அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
பின் அதில் வைட்டமின் ஈ மாத்திரையை போட்டு நன்றாக கலந்து புருவங்களில் தடவி வந்தால் விரைவில் அடர்த்தியாக வளரும்.
தீர்வு 4:-
1)வெந்தயம் – கால் தேக்கரண்டி
2) விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3) கற்றாழை ஜெல் – அரை தேக்கரண்டி
முதலில் ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் ஊற்ற வேண்டும். அடுத்து கால் டீஸ்பூன் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். விளக்கெண்ணெய்யில் இந்த வெந்தயப் பொடியை கொட்டி கலக்கவும்.
அடுத்து அதனுடன் அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவையை புருவத்தின் மீது தடவினால், அவை அடர்த்தியாக வளரும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan