குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா?

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா?

தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது கோடை காலத்தில் பயன்படுத்துவதை விட குளிர்காலத்தில் பயன்படுத்துவது தான் அதிக பலன் தரும் என்று கூறப்படுகிறது.

குளிர்ந்த காலங்களில் தலையில் எண்ணெய் வைப்பது வறண்ட காற்று காரணமாக உச்சந்தலையில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

தலையில் எண்ணெய் தடவுவதால் முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

குளிர்காலங்களில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் கீழ்க்கண்டவாறு;

குளிர்காலங்களில் நீர் குடிக்கும் அளவு குறைவதால் உடலில் வறட்சி ஏற்பட்டு உச்சந்தலை வரை அதன் பாதிப்பதாக கூறப்படுகிறது.

உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தி தலையில் மசாஜ் செய்து கொள்ளலாம்.

உச்சந்தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முடியின் வேர்களில் மசாஜ் செய்யும் போது ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சீராக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகளில் உள்ள கொழுப்பு அமிலங்கள் விட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நமது கூந்தலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

மேலும் கூந்தலின் முடியின் நுனி உடைவதை தடுக்கின்றன.

குளிர்காலங்களில் குளிர்ந்த காற்று மற்றும் ஈரப்பதம் காரணமாக கூந்தலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கூந்தலில் எண்ணெய் தடவுவதன் மூலம் இது ஒரு பாதுகாப்பானாக செயல்படும்.

ஆர்கான் எண்ணெய் போன்ற எண்ணெய்களை கூந்தலில் தடவி மசாஜ் செய்தால் அதில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கூந்தலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

Exit mobile version