விவாகரத்து தொடர்பான மனு விசாரணை-தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு!!

விவாகரத்து தொடர்பான மனு விசாரணை-தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு!!

சென்னை: விவாகரத்து வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நவம்பர் 18, 2004 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஜனவரி 17, 2022 அன்று, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதன்படி அவர்கள் இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர்.

இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை அதிர்ச்சி அடைய செய்தது.மேலும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இருவரும் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை அடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்குவதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். குழந்தைகள் அவ்வபோது தந்தை தனுஷ் உடன் நேரம் செலவிடுவதை விரும்புகின்றனர். தந்தை ரஜினிகாந்த் இருவரும் இணைந்து வாழவே ஆசைப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், விவாகரத்து தொடர்புடைய மனு மீதான விசாரணை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் ஆஜராக உள்ளனர்.