“மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்”-எட்வின் தோங்

“மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்”-எட்வின் தோங்

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி வசதிகள் விரைவில் அமைக்கப்படும் என்று
கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை அமைச்சர் எட்வின் தோங் உறுதியளித்தார்.

மேலும் அவர்களுக்கு முழுமையான விளையாட்டு தொடர்பான அறிவியல் ஆதரவும் வழங்கப்படும் என்று கூறினார்.

காலாங்கில் உள்ள சிங்கப்பூர் அணியின் பயிற்சி நிலையமானது மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.

ஊனமுற்றோருக்கான விளையாட்டு அமைப்புகளுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தோங் கூறினார்.

சிங்கப்பூர் குழுவின் வளாகத்தை வடிவமைக்கவும் திட்டமிடவும் அவர்களின் கருத்து உதவியாக இருக்கும்.

பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் மிகவும் சிறப்பாக போட்டியிட்டு வருகின்றனர்.

மற்ற விளையாட்டாளர்களைப் போலவே அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறான வசதிகளைத் தவிர்த்து உடல் ஊனமுற்றோருக்கான பயிற்சி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

இதனால் அவர்கள் மேலும் உற்சாகத்துடனும் தன் மீது நம்பிக்கை கொண்டவர்களாய் போட்டிகளில் சிறப்பாக விளையாடிச் சாதனை படைப்பர்.

 

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg