“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ

"மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி "- மூத்த அமைச்சர் லீ

சிங்கப்பூர்: நட்பு நாடுகளாக இருக்கும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இருநாட்டு தலைவர் சந்திப்புகள் நடைபெற்றன.

அந்த வகையில் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் அதிவேக ரயில் உள்கட்டமைப்பு நிகழ்வுகளில் சந்தித்த இருவரும் அது தொடர்பாக விரிவாக பேசினர்.

நெகிரி செம்பிலான் மாநில ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸை முதன்முறையாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக திரு லீ தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சந்திப்புகளால் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்றார் திரு லீ.