அந்த தேதியை நினைத்து பயப்படும் தீபிகா படுகோன்…

அந்த தேதியை நினைத்து பயப்படும் தீபிகா படுகோன்...

அந்த தேதியை நினைத்து பயப்படும் தீபிகா படுகோன்…

ஹிந்தி திரையுலகில் டாப் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்.

இருவரும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள். இருவரும் பாஜிரா மஸ்தானி, ராம் லீலா போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.ராம் லீலாவில் இணைந்து நடிக்கும் போது காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் பாலிவுட்டில் தனித்தனியாக பிசியாக நடித்து வருகின்றனர். தீபிகா படுகோனும் தன் வசம் பல படங்கள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படங்கள் பதான், ஜவான். இந்த இரண்டு படங்களும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் படத்தில் நடித்தார்.தற்போது மீண்டும் சிங்கம் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜூன் 27ஆம் தேதி அவர் நடித்த கல்கி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக இந்த ஜோடி அறிவித்தனர். செப்டம்பரில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை தீபிகா படுகோன், நான் கர்ப்பமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன்.

உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்காக நான் நிறைய உணவுகளை தவிர்த்துள்ளேன். ஆனால் இப்போது குழந்தைக்காக பார்த்து பார்த்து சாப்பிட்டு வருகிறேன். முடிந்தவரை உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறேன்.பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு வருகிறேன். எனினும் பிரசவம் குறித்து பயமாக இருப்பதாக அவர் கூறினார்.