இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இந்தியாவில் பிரார்த்தனைக் கூட்டத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 121 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

இறந்தவர்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

150 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்தரஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஜூன் 2 அன்று இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

மதச் சொற்பொழிவில் சுமார் 80,000 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிகழ்வில் ஏறக்குறைய 2,00,000 பேர் கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் சொற்பொழிவு முடிந்து விட்டு திரும்பும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் விசாரணை நடைபெற்று வருகிறது.