காரைக்குடி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பலியனோர் எண்ணிக்கை உயர்வு!!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 2 பேர் பலியாகினர்..

ஏற்கனவே சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், தற்போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் மாடு முட்டி பலியானார். அவர் யார்? எந்த ஊர்? எனத்தெரிய வில்லை.

இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் திருப்பத்தூர்,காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாச்சியார்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.