வியட்நாம் குடியிருப்பில் சிங்கப்பூர் பெண்ணின் சடலம்!! என்ன நடந்தது?

வியட்நாம் குடியிருப்பில் சிங்கப்பூர் பெண்ணின் சடலம்!! என்ன நடந்தது?

சிங்கப்பூர்: ஜூன் 13-ஆம் தேதி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள கோல்ட்வியூ காண்டாமினியத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அந்த பெண்ணை ஜனவரி மாதம் கடைசியாக பார்த்ததாக கூறப்படுகிறது.

பெண்ணின் உடலை அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அந்த இறந்து கிடைப்பதை கண்டுள்ளார்.

அதன் பிறகு காண்டோமினியம் நிர்வாகக் குழுவிடம் அவர் தெரிவித்தார்.காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில்,குடியிருப்பின் உரிமையாளர் குடியிருப்பை வாடகைக்கு விட வில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை வியட்நாமிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

ஹோ சி மின் நகரில் உள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் துணைத் தூதுரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இச்சம்பவம் குறித்து தொடர்பு கொண்டதாக CNA கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது.

அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு உதவியையும்,ஆதரவையும் MFA மற்றும் தூதரகம் ஜெனரல் அளிக்கிறது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.