ஆர்ச்சர்ட் டவர்ஸ் அருகே நடந்த மோதல்!! ஆறாவது நபருக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

ஆர்ச்சர்ட் டவர்ஸ் அருகே நடந்த மோதல்!! ஆறாவது நபருக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

போக்குவரத்திற்கு இடையூறாக 2022-ஆம் ஆண்டில் ஆர்ச்சர்ட் டவர்ஸ் ஷாப்பிங் மால் அருகே சண்டையில் ஈடுபட்டதற்காக ஆறாவது நபருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பளித்துள்ளது.

இச்சம்பவம் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பிறகு நடந்தது.

போக்குவரத்திற்கு இடையூறாக 2022-ஆம் ஆண்டில் ஆர்ச்சர்ட் டவர்ஸ் ஷாப்பிங் மால் அருகே சண்டையில் ஈடுபட்டதற்காக ஆறாவது நபருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பளித்துள்ளது.

இச்சம்பவம் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பிறகு நடந்தது.

ரகசிய சங்கத்தின் மூத்த உறுப்பினரான முஹம்மது ஃபைஸ் ஜீனைடி (31) கலவரம் மற்றும் சட்டவிரோத சமூகத்தில் உறுப்பினராக இருந்ததற்காக தல ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாட் கார்ட்ரிட்ஜ்களை விற்றது உட்பட ஐந்து வாப்பிங் தொடர்பான குற்றங்களுக்காக $10000 அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் அந்த தொகையை திருப்பி செலுத்த தவறினால் 20 நாட்கள் வரை காவல் சிறையில் வைக்கப்படுவார்.

மேலும் சண்டையின் போது அவரது சக கும்பல் உறுப்பினர்களாக இருந்த மற்ற ஐந்து பேரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சோய் ஹாப்பி என்ற ஆர்ச்சர்ட் டவர்ஸ் கிளப்பில் ஆகஸ்ட் 14, 2022 அன்று ஆறு பேர் உட்பட கும்பலைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.
அவர்களில் சிலர் புகை பிடிக்க வெளியே சென்றனர்.

மிஸ்ரா அப்துல் அஸ்மான் என்பவரிடம் ஃபைஸ் பேசிக் கொண்டிருந்தார்.
பேசி கொண்டிருந்த இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

வாய் தகராறு மோதலாக மாறியது.இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. வெவ்வேறு மருத்துவமனைகளில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.