புக்கிட் தீமாவில் 6 வது மாடி வீட்டிற்குள் நுழைந்த சிப்ஸ் திருடன்….!

புக்கிட் தீமாவில் 6 வது மாடி வீட்டிற்குள் நுழைந்த சிப்ஸ் திருடன்....!

சிங்கப்பூர்: புக்கிட் தீமா பகுதியில் உள்ள வீட்டிற்குள் குரங்கு ஒன்று புகுந்தது.

அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் உள்ள வீட்டிற்குள் குரங்கு புகுந்ததாக தகவல் வெளியானது.

அதைக் காட்டும் வீடியோ “Singapore Wildlife Sightings” என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், குரங்கு மேஜையின் மீது
வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறுவதை காணலாம்.

உணவுப் பொருளை எடுப்பதற்கு முன் அழகாக சுற்றும் முற்றும் பார்த்த பின்பு அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்டது.

அந்த வீடு புக்கிட் தீமா இயற்கை பாதுகாப்பு பகுதிக்கு அருகில் இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ஜன்னலை மூடி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போதுதான் இது போன்ற அழைக்கப்படாத விருந்தினர்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தவிர்க்கலாம் என்று கூறினார்கள்.