சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை...!!!

சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
இந்த எண்ணிக்கையானது ஆண்டு அடிப்படையில் 13 சதவீதம் அதிகமாகும்.
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள அதன் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஓய்வு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
அடுத்த ஆண்டு இரண்டாவது உணவகம் திறக்கப்படவுள்ளது.அங்கு பலவிதமான உணவு பொருட்களை எதிர்பார்க்கலாம்.
விமான நிலையத்தின் வருடாந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அமைச்சர் சீ ஹொங் டாட் கூடுதல் வசதிகளை அறிவித்தார்.
வெப்பத்தை தணிக்க கேபின் கையாளும் பகுதிகளில் கூடுதல் மின்விசிறிகள் பொருத்தப்படும் என்று கூறினார்.
மேலும் அமைச்சர் சீ ஹொங்,வெப்பத்தை குறைப்பதற்கான புதுமையான வழிகளும் ஆராயப்படும் என்று கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan