அனைத்து செய்திகள்

Singapore news

சாதனைப் படைத்த சாங்கி விமான நிலையம்!

மீண்டும் உலகின் ஆகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் SkyTrax நிறுவனம் விருதுகளை வழங்கியது. SkyTrax நிறுவனம் லண்டனைத் தளமாக கொண்டது.12 வது முறையாக சாங்கி விமான நிலையம் அந்த விருதைப் பெற்று சாதனைப் படைத்திருக்கிறது. சாங்கி விமான நிலையம் சிறந்த பொழுதுபோக்கு வசதிகளுக்கான விருது, சிறந்த உணவகங்களை கொண்டிருப்பதற்கான விருது ஆகிய இரண்டிற்கும் விருதைப் பெற்றுள்ளது. 2021,2022 -ஆம் ஆண்டுகளில் கிருமி தொற்று பரவல் …

சாதனைப் படைத்த சாங்கி விமான நிலையம்! Read More »

Singapore News in Tamil

இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்!

மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து துவாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படும். இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.இனிமேல்,கூட்ட நெரிசல் இல்லாத வேளைகளில் வாகனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை,இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெரிசலற்ற நேரம். தற்போது நெரிசலற்ற நேரங்களில் வாகனப் பிரிவைப் பொறுத்து பயணம் செய்யும் போது 80 காசு முதல் $9.30 …

இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்! Read More »

Latest Singapore News

2022-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டிய வேலையில் இருப்போரின் மொத்த விகிதம்!

15 ஆண்டுக்கு முன் இருந்த்தை விட கடந்த 2022-ஆம் ஆண்டு வேலையில் இருப்பவர்களின் மொத்த விகிதம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.கடந்த ஆண்டு விகிதம் அதிகமாகி உள்ளது. கிருமி தொற்றுச் முன்பிருந்த சூழ்நிலையில் உள்ள சராசரியுடன் நீண்டகாலமாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை விகிதத்தையும் ஒப்பிடுகையில் குறைந்திருந்தது. வேலையில் இருப்போர்களின் விகிதம் 2.9 விழுக்காடு கூடியுள்ளது. வர்த்தக மறு சீரமைப்பால் 2022-ஆம் ஆண்டின் கடைசி 2 காலாண்டுகளில் அதிகமானோர் வேலையிழப்புக்கு ஆளானபோதும் ஒட்டுமொத்த ஆட்குறைப்பு விகிதம் 2019-ஆண்டை குறைவாகவே பதிவாகியுள்ளன. …

2022-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டிய வேலையில் இருப்போரின் மொத்த விகிதம்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரிலும் செர்ரி பூக்கள்!

இப்போது ஜப்பானில் செர்ரி பூக்கள் பூத்து குலுங்கும் பருவம். அதன் அழகை பார்க்க முடியவில்லை என்று ஏங்குவர். அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ளூர் கண்காட்சி ஒன்று அதே அனுபவத்தைத் தருகிறது. கரையோர பூந்தோட்டத்தில் கண்கவர் காட்சியைக் காணலாம். ஜப்பானில் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகளில் சிங்கப்பூரில் ஈடுப்படவும் ஓர் நல்ல வாய்ப்பு.

Singapore Breaking News in Tamil

ஜொகூர் ரயில் தண்டவாளத்தில் நடந்தே சிங்கப்பூருக்கு வந்த நபர்!

கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஜொகூர் பாலத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்தே வந்து சிங்கப்பூருக்குள் பங்களாதேஷை சேர்ந்த நபர் நுழைய முயன்றுள்ளார். அவர் சட்ட விரோதமாக நுழைய முயன்றதால் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கைது செய்தது. கைது செய்யப்பட்டவரிடம் எந்த ஒரு அடையாள ஆவணங்களும், பயண ஆவணங்களும் இல்லை என்று ஆணையம் மார்ச் 14-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதில் குறிப்பிட்டு இருந்தது. சிங்கப்பூருக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைவதையும், வெளியேறுவதையும் கடுமையாக …

ஜொகூர் ரயில் தண்டவாளத்தில் நடந்தே சிங்கப்பூருக்கு வந்த நபர்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் வாடகை வீடுகள் தேடுபவர்களே உஷார்!

சிங்கப்பூர் முழுவதும் 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் வாடகை மோசடி கும்பல் கைதாகினர். காவல்துறையில் வாடகை மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 1.3 மில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்ட வாடகை மோசடியில் கைதாகின 11 பேருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களில் 9 பேர் ஆண்கள், மற்றவர்கள் பெண்கள். அவர்களுடைய வயது 18 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.நேற்று காவல்துறை தெரிவித்தது. வாடகை இடம் தேடுபவர்களிடம் முகவரைப் போல் நடித்து அவர்களிடம் லாவகமாக பேசி நம்ப வைக்கின்றனர். …

சிங்கப்பூரில் வாடகை வீடுகள் தேடுபவர்களே உஷார்! Read More »

Latest Sports News Online

இனி சிங்கப்பூர் அரசாங்கம் மருந்து பொருட்களைச் சேகரித்து வைப்பதிலும் கவனம் செலுத்தும்!

சிங்கப்பூரில் இனி , மருந்து பொருட்களையும் சேமித்து வைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்று வர்த்தகத் தொழில் அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் Gabriel Lim கூறினார். தற்போது உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது போல் இதனையும் சேகரித்து வைக்க உள்ளது. அரசாங்கம் தற்போது அரிசி போன்ற அடிப்படைத் தேவை பொருட்களைச் சேமித்து வைத்துள்ளது. இதே போல் வேறு எந்ததெந்த பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்று ஆராய்வதாகவும் கூறினார். முக கவசம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பது அவசியமாகலாம் …

இனி சிங்கப்பூர் அரசாங்கம் மருந்து பொருட்களைச் சேகரித்து வைப்பதிலும் கவனம் செலுத்தும்! Read More »

Tamil Sports News Online

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

கேரளாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரும், இடுக்கியைச் சேர்ந்த …

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு!

சிங்கப்பூரில் பணிபுரியும் பகுதி நேர பணியாளர்கள் இனி அவர்கள் பணிபுரியும் வீட்டிலுள்ள குழந்தைகளையும்,முதியவர்களையும் பராமரிக்க அனுமதிக்கப்படுவர். அதற்குக் காரணம் பகுதிநேர வீட்டு வேலைக்கான திட்டம் விரிவுப்படுத்தப்பட்டதே. இவ்வாறு மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது. இதற்குமுன் அந்த திட்டத்தின்கீழ் வீட்டைச் சுத்தம் செய்வது, கார் கழுவுவது போன்ற சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது,இனி குழந்தைகளையும், முதியவர்களையும் கவனித்துக் கொள்ளும் சேவைகளும் சேர்க்கப்படுகிறது. இன்று அதன் முன்னோடி திட்டத்தை மனிதவள அமைச்சகம் தொடங்கி வைக்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் …

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு! Read More »

திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக சென்றடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

மார்ச் மாதம் 14-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தென்ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்க் நகரில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் நிறுத்தி வைக்கப்பட்டது.சிங்கப்பூரிலிருந்து SQ478 விமானம் ஜொஹான்னஸ்பர்க் நகர் வழியாக கேப் டவுனிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தது. பயணம் செய்து கொண்டிருக்கும் போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் CNA விடம் கூறியது. OR Tambo விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதன்பின் அதில் …

திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக சென்றடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! Read More »