சிங்கப்பூரில் பொது மக்களிடம் மின்கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டின் அவசியம் அதிகரித்துள்ளது!
சிங்கப்பூரில் பொது மக்களிடம் மறுசுழற்சி முறை அதிகம் உணரப்பட்டு வருவதாக மின்கழிவுகளைச் சேகரிக்க உரிமம் பெற்ற ALBA E-WASTE நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரில் மின்கழிவுகளைச் சேகரித்த ஒரே நிறுவனம் இது.மறுபயன்பாட்டின் அவசியத்தைப் பொதுமக்கள் பெரிதும் உணர்ந்துவிட்டார்கள். அதில் குறிப்பாக பெரும்பாலானோர் மின்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். நிறுவனம் சேகரித்த மின்கழிவுகளின் எடை 480 டன்னுக்கும் அதிகமாக கிடைத்தது.இந்த கழிவுகள் 2021-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை சேகரித்ததாகும். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து இந்த …