PayLah! செயலியை பயன்படுத்தி பணம் செலுத்துவோருக்கு $3 வெள்ளிச் சலுகை….

சிங்கப்பூர்: ஆகஸ்ட் 1 முதல் PayLah! வாடிக்கையாளர்கள் $3 வெள்ளி வரை சலுகைகளை அனுபவிக்க முடியும்.

PayLah! செயலியை பயன்படுத்தி சவாரிகளைப் பெறுதல், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், உணவுகளை ஆர்டர் செய்தல் போன்றவற்றிற்காக தினமும் அல்டிமேட் ஆஃபர்கள் மற்றும் வெகுமதி புள்ளிகளை பெறலாம்.

PayLah! செயலி மூலம் பணம் செலுத்தும் போது கார்டில் அதற்கான வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். இந்த வெகுமதி புள்ளிகளை பயன்படுத்தி நாம் பொருளின் விலையை குறைக்கலாம். 2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் PayLah! வை பயன்படுத்தி மால்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து பிரத்தியேகமான டீல்கள் மற்றும் வெகுமதிகளை பெறுகின்றனர்.

வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் கடைகள், சந்தைகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றிற்கு DBS PayLah!செயலியை பயன்படுத்தி பணம் செலுத்தும் போது மூன்று வெள்ளி வரை சலுகைகளை பெறலாம்.

மேலும் உங்கள் DBS/POSB கார்டுகளின் ரிவார்டு புள்ளிகளை ஒரே பயன்பாட்டில் நிர்வகிக்கலாம் மற்றும் மீட்டெடுக்கலாம்.

பரிவர்த்தனை விரைவாக நடந்தால் மட்டுமே சிறிய கடைகள் லாபம் பார்க்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு,POSB வங்கி ‘support our heartlands’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார்.