சிங்கப்பூரில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட வாகனங்கள்!! தலைக்குப்பற கவிழ்ந்த கார்!!

சிங்கப்பூரில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட வாகனங்கள்!! தலைக்குப்பற கவிழ்ந்த கார்!!

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில், இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து மதியம் 12:50 மணி அளவில் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

33 மற்றும் 44 வயது உடைய இரண்டு ஆண் ஓட்டுனர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

33 வயதான கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.