உடைந்த மின்கம்பத்தில் மோதிய கேபிள் கார் கேபின்!! அந்தரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்!!

உடைந்த மின்கம்பத்தில் மோதிய கேபிள் கார் கேபின்!! அந்தரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்!!

துருக்கியின் அன்டலியாவில்
கேபிள் கார் ஒன்று உடைந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதியன்று மாலை 5.23 மணியளவில் நடந்தது. இந்த விபத்தால் இருபத்து நான்கு கேபின்கள் காற்றில் சிக்கியது.கேபின்களில் சிக்கி பலர் சிக்கி தவித்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் இதுவரை 112 பேரை மீட்டுள்ளனர்.

இன்னும் 60 க்கும் மேற்பட்டோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.