பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!!

பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!!

மலேசியாவில் மார்ச் 29 ஆம் தேதி அன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் – கராக் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த இருவரில் ஒரு வெளிநாட்டு ஆண்,மலேசியா பெண் ஒருவரும் ஆவர்.

அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 20 பேர் பயணித்ததாக பாகாங் தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது.

பேருந்து கவிழ்வதற்கு முன் ஏதாவது ஓர் இடத்தில் மோதியிருக்கலாம் என்றும் தெரிவித்தது.

காயமடைந்தவர்கள் பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்த்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.