புக்கெட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து..!!!

சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஒரு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் நேற்று (மார்ச் 6) மாலை சுமார் 6.15 மணியளவில் இடம்பெற்றது.
பான் தீவு விரைவுச்சாலைக்கு செல்லும் வழியில் ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்த அதிகாரிகள் தீயை பத்திரமாக அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பன்னிரண்டு பேர் பேருந்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் பேருந்தின் பின்புறம் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகிறது.
கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்ததாகத் தெரிகிறது.
பேருந்து எப்படி தீப்பிடித்தது என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நேற்று காலை தெம்பனிஸ் சாலையில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது.
சமீப காலமாகவே வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக செய்திகள் வெளியாகின்றன.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan