பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்ட சிறுவன் மரணம்!!

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்ட சிறுவன் மரணம்!!

கம்போடியாவில் 9 வயது சிறுவன் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் கோழி இறைச்சியை சாப்பிட்ட பிறகு அவனது உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

மேலும் சிறுவனின் வீட்டிலிருந்த ஐந்து கோழிகள் மற்றும் மூன்று வாத்துகள் இறந்ததாகவும், அதை அவர்கள் சமைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.