ஜோகூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! உண்மையானதா? போலியானதா?

ஜோகூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! உண்மையானதா? போலியானதா?

பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்கள் அடங்கிய மின்னஞ்சல்கள் ஜோகூர் பாரு நகர சபை, காவல்துறை தலைமையகம் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு அனுப்பப்பட்டன.

அனைத்து மின்னஞ்சல்களும் தகாஹிரோ கராவாசா என்ற பெயரில் அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து இடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல்கள் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.