சிங்கப்பூரில் காருடன் பைக் மோதி விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.மருத்துவமனைக்கு சுயநினைவின்றி 47 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து அக்டோபர் 4-ஆம் தேதி(இன்று) காலை சுமார் 8.15 மணியளவில் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கி செல்லும் வழியில் இந்த விபத்து நடந்தது.

இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது.42 வயதுடைய கார் ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது.