வண்ணமயமாக காட்சியளிக்கும் பெர்லின் தலைநகரம்…!!!

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் 20வது முறையாக ஒளித் திருவிழா நடைபெறுகிறது.இந்த ஆண்டின் கருப்பொருள் “சுதந்திரத்தைக் கொண்டாடு” என்பதாகும்.

அடுத்த 10 நாட்களுக்கு, முக்கிய கட்டிடங்கள் இரவில் மிளிருவதை மக்கள் கண்டு ரசிக்கலாம்.பிராண்டன்பர்க் கேட், பெர்லின் டவர், பெர்லின் தேவாலயம் போன்ற புகழ்பெற்ற கட்டிடங்கள் பல வண்ணங்களில் புதிய தோற்றம் பெற்றன.

20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மீன் காட்சியகம், நடன நிகழ்ச்சிகள், பூச்சிகள் என பல அம்சங்கள் இடம்பெற்று இருந்தது கட்டிடங்களுக்கு மேலும் அழகு சேர்த்தன.

ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் பெர்லினுக்கு வருகிறார்கள்.

ஜெர்மன் தலைநகர் அடுத்த 10 இரவுகளுக்கு கட்டிடங்கள் மட்டுமின்றி பல புகழ்பெற்ற இடங்களும் வண்ணமயமாக ஜொலிப்பதை பார்வையாளர்கள் பார்த்து மகிழலாம்.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg