நடைபாதையில் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை…!!! 2025 ஜூலை முதல் அமலுக்கு வரும் நடைமுறை..!!

நடைபாதையில் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை...!!! 2025 ஜூலை முதல் அமலுக்கு வரும் நடைமுறை..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025) ஜூலை 1 முதல் சைக்கிள்கள் மற்றும் கிக் ஸ்கூட்டர்கள் போன்ற மோட்டார் பொருத்தப்படாத தனிநபர் இயக்கம் சாதனங்கள் (PMD) போன்றவை நடைபாதையில் செல்ல அனுமதி கிடையாது.

இந்தத் தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) புதன்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​200 கிலோமீட்டருக்கும் அதிகமான சைக்கிள் பாதைகள் நடைபாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் சைக்கிள் ஓட்டும் பாதைகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ள நடைபாதைகள் 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து படிப்படியாக பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையாக மாற்றப்படும் என்று தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

இதனால் நடைபாதைகளை பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஜூலை 1ம் தேதி முதல் விதியை மீறுபவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் விதிகளை மீறி நடைபாதையில் முதல்முறையாக சைக்கிள் ஓட்டிச் செல்லும் நபர்களுக்கு 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here ⬇️