சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட மோசமான விபத்து!! ஒருவரின் கால் சக்கரங்களுக்குகீழ் சிக்கி கொண்ட பரிதாபம்!!

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட மோசமான விபத்து!! ஒருவரின் கால் சக்கரங்களுக்குகீழ் சிக்கி கொண்ட பரிதாபம்!!

சிங்கப்பூரில் இன்று(ஏப்ரல் 22)காலை மோசமான விபத்து ஏற்பட்டது. பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர்.இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.அவர்கள் இருவரில் ஒருவர் 17 வயது பெண்ணும்,மறறொருவர் 57 வயது பெண்.

இந்த விபத்து தெம்பனீஸ் அவென்யூ 1 மற்றும் தெம்பனீஸ் அவென்யூ நான்கு சந்திப்பில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு சுமார் 7 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.

இந்த விபத்து குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

குறைந்தது 6 வாகனங்கள் சேதமடைந்திருப்பதை அந்த வீடியோ பதிவில் காணலாம்.

அதோடு ஒரு வாகனம் தலைக் குப்பற கவிழ்ந்து இருப்பதையும் காணலாம்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்த போது, ஒரு நபரின் கால் சக்கரங்களுக்கு கீழ் சிக்கி கொண்டிருந்தது. சக்கரங்களுக்கு கீழ் சிக்கி கொண்ட காலை அதிகாரிகள் எடுத்தனர்.

விபத்தில் காயமடைந்த 8 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களில் 4 பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.டான் டொக் செங் மருத்துவமனைக்கு இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டனர்.

மீதமுள்ள இரண்டு பேரை KK மகளிர், சிறார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பொது மக்களில் சிலர் உதவி செய்தனர் என்றும் தெரிவித்தது.