சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விருது நிகழ்ச்சி!!

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விருது நிகழ்ச்சி!!

சிங்கப்பூரில் Goh Chok Tong Enable விருது நிகழ்ச்சி இவ்வாண்டும் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை அங்கீகரிப்பதும், அவர்களை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

தற்போது 6- வது முறையாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் GCTEA (UBS Achievement), GCTEA (UBS Promise) ஆகிய 2 விருது பிரிவுகள் உள்ளன.

விருதுக்கு தகுதியானவார்களின் பெயர்களை வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி வரை பெயர்களைச் சமர்ப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் இரு விருது பிரிவுகளுக்கும் பரிந்துரைக்கப்படலாம்.

வெற்றியாளர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிசம்பரில் அறிவிக்கப்படுவார்கள்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 15 -ஆம் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.