பயணிகளின் கவனத்திற்கு…!!! இந்தப் பகுதிகளில் ரயில் சேவை தடை….!!

பயணிகளின் கவனத்திற்கு...!!! இந்தப் பகுதிகளில் ரயில் சேவை தடை....!!

சிங்கப்பூர்: பூன் லே MRT நிலையத்திற்கும் குவீன்ஸ்டவுன் MRT நிலையத்திற்கும் இடையே ரயில்கள் இயங்கவில்லை.SMRT தனது முகநூல் பக்கத்தில் காலை 9.52 மணிக்கு அறிவித்தது.

மின்கசிவு காரணமாக கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை காலை 9.25 மணியளவில், கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ரயில் ஒன்று உலு பாண்டான் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தபோது மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, கிளிமெண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலானது நிறுத்தப்பட்டது.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அதிகாரிகள் வழிகாட்டுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பூன் லே மற்றும் குவீன்ஸ்டவுன் MRT நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக SMRT அறிவித்துள்ளது.

சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு SMRT மன்னிப்பு கேட்டது.