சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு …!!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு ...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகளின் அதிகாரிகள் சட்டவிரோத மதுபான கன்டெய்னர்களை கடத்தும் முயற்சியை முறியடித்தனர்.

பாசிர் பஞ்சாங் சோதனை நிலைய அதிகாரிகள் 17,628 மதுபாட்டில்களை மீட்டனர்.

அவை பல்வேறு சுவை கொண்ட பானங்கள் என்ற பெயரில் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் அவற்றைச் சோதனை செய்த அதிகாரிகள் சில விசித்திரமான அம்சங்களைக் கண்டறிந்தனர்.

எனவே அதிகாரிகள் கண்டெய்னரை கூடுதல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அது ஆல்கஹால் பாட்டில்கள் என கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here ⬇️