பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!!

பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!!

பொன்னமராவதி, பிப்.09-
பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் முப்பெரும் விழா நடைபெற்றது.பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இலக்கிய விழா,விளையாட்டுப் போட்டி,ஆண்டு விழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார்.
கொடை வள்ளல் பழனியப்பன், சிவகாமி,திருநாவுக்கரசு புரவலர் மாணிக்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

உதவி தலைமையாசிரியர் வனிதா,கவுன்சிலர் புவனேஸ்வரி காளிதாஸ் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார்கள்.பின்னர் தொடங்கிய முப்பெரும் விழாவில் மாணவிகளின் பரத நாட்டியம், நடனப்போட்டி பேச்சுப்போட்டி, இலக்கியம்,கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வுகளை தமிழாசிரியர் சுதா,கவிதா, தொகுத்து வழங்கினார்.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அப்பள்ளி ஆசிரியர்கள் பூமி தேவி,சர்மிளா, இந்திராகாந்தி,சுதா ஆகியோர் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வேந்தன்பட்டி, அஞ்சுபுளிபட்டி, பிள்ளையார்பட்டி, கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலைச்சிவபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.