கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது!!

கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது!!

சிங்கப்பூரில் கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததாக இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரின் ஒருவர் வயது 19 மற்றொருவர் வயது 20.

இந்த சம்பவம் குறித்து ஜூன் 4-ஆம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.

பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 71 இல் உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள சுவரில் கந்துவட்டி தொடர்பான கீறல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

கண்காணிப்பு கேமரா உதவியோடு அவர்களின் அடையாளங்கள் தெரிய வந்தது.

அவர்களைக் கண்டுபிடித்து காவல்துறை கைது செய்தது.

இருவரில் ஒருவர் ஜூன் 11-ஆம் தேதியும், மற்றொருவர் ஜூன் 12-ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜூன் 13-ஆம் தேதி(இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.