சிங்கப்பூரில் தனது நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதம்!! கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!!

சிங்கப்பூரில் தனது நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதம்!! கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!!

சிங்கப்பூரில் தனது நண்பர் மீது கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

33 வயதான லிம் ஸி ஹுய் என்ற பெண், 26 வயதான திரு. மார்ட்டின் போயே என்ற நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது திரு.மார்டின் லிம்மின் தொலைபேசியை சேதப்படுத்தினார்.

இதனால் கோபமடைந்த லிம், திரு.மார்ட்டினை அறைந்தார்.

ஆத்திரம் அடங்காத லிம், உணவருந்திக் கொண்டிருந்த திரு. மார்ட்டின் மீது கொதிக்கும் சூப்பை ஊற்றினார்.

இதில் பலத்த காயம் அடைந்த திரு மார்ட்டினை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.