சிங்கப்பூரில் ஓர் உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!!

சிங்கப்பூரின் சைனா டவுனில் உள்ள ஒரு உணவகத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி அன்று தகராறு ஏற்பட்டது.இதில் 29 வயதான நபர் ஒருவர் காயமடைந்தார்.அவர் அந்த உணவகத்தில் உணவருந்தியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாலை 6:25 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது..இதனை அடுத்து காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

காயமடைந்த அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.