மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!!

மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!!

மலேசிய மாநிலமான சபாவில் 41 வயதான மனைவியை தீ வைத்து எரித்த 50 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று இரவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தபாய் என்ற பானத்தை அருந்திக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில் கணவன் மனைவியை தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிறகு அந்த நபர் அவரது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 4ஆம் தேதியன்று அந்த பெண் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.