கொரோனா தடுப்பூசி போடாததால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் இருக்கிறீர்களா? உடனடியாக போட்டு கொள்ளும் வாய்ப்பு!!

கொரோனா தடுப்பூசி போடவில்லையே!! எங்கு போடுவது?? இப்போதும் தடுப்பூசி கிடைக்குதா? என்று நினைப்பவர்களுக்கான பதிவு.சிங்கப்பூர் போக வேண்டுமென்றால் கட்டாயமாக இரண்டு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி அளிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் பல இடங்களில் தடுப்பூசி கிடைப்பதில்லை. தடுப்பூசி கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ஒரு சிலர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பதால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் நமது Subscriber ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்.சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஜனவரி 22-ஆம் தேதியுடன் அவை முடிந்து விடும். யாரேனும் தடுப்பூசி போடாமல் இருந்தீர்கள் என்றால், உடனடியாக போட்டு கொள்ளுங்கள். படித்து பயன்பெறுங்கள்!!