Latest Tamil News Online

ஏப்ரல் மாதத்திற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான்.

ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருந்தனர்.

கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு முன் டெஸ்ட் அடிப்பதற்கு இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்திற்குள் முடிந்து விடும்.

இப்போது மூன்று லட்சத்திலிருந்து மூன்று லட்சத்து முப்பதாயிரம் வரை கேட்கின்றனர்.

தற்போது,ஏப்ரல் மாதத்திற்கான டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டது.

ஒரு சில Institute களுக்கு ரிசல்ட் வரவில்லை. சற்று தாமதம் ஆகலாம்.

நீங்கள் Institutes களின் வேலை நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.ரிசல்ட் வராத Institutes களுக்கு ஓரிரு நாட்களுக்குள் வரும்.

டெஸ்ட் ரிசல்ட் கிடைத்தவர்கள் தயவு செய்து காத்திருக்காமல் உடனடியாக சிங்கப்பூர் செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள `sgtamilan´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.