லிட்டில் இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து….

அக்டோபர் 17-ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள Buffalo ரோட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த தகவலை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் உள்ள வீட்டின் வரவேற்பு அறை மற்றும் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தீ ஏற்பட்டதால் 20 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த விபத்தின் வீடியோ டிக்டாக்கில் பகிரப்பட்டு வருகிறது.