சிங்கப்பூரில் மேலும் ஒரு வேலையிட மரணம்!வேலையின் போது உயரத்திலிருந்து கீழே விழுந்த ஊழியர் மரணம்!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட மரணம் நேர்ந்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி மார்சிலிங் லேனில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

கட்டுமானப் பணியில் ஊழியர் ஈடுபட்டு இருந்தபோது 4 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

அவருக்கு வயது 33.கீழே விழுந்த ஊழியரை கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் 1-ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறதாக என்று குறிப்பிட்டது.ஊழியர் Guan Teck construction 2000 நிறுவனத்தில் பணிப்புரிந்தார்.

இந்நிறுவனத்திற்கு முழுமையான வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகளில் குறைப்பாடுகள் கண்டறியப் பட்டுள்ளதாக கூறியது.

அது மட்டுமல்லாமல் புதிய வெளிநாட்டு ஊழியர்களை அடுத்த 3 மாதத்திற்கு அவர்களை வேலையில் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சகத்திடம் பாதுகாப்பு அதிகாரிகள் விபத்து குறித்து விளக்கம் தர வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த விபத்து விசாரணை முடிவில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது.