விமானம் பறந்து கொண்டிருந்த போது பயணியிடம் திருடிய மற்றொரு பயணி!!

விமானம் பறந்து கொண்டிருந்த போது பயணியிடம் திருடிய மற்றொரு பயணி!!

54 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்தவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நகைக்கடை முதலாளியிடம் $120,000 பணத்தை திருடிய குற்றத்திற்காக இரண்டரை வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை நேற்று(ஜூன் 21) விதிக்கப்பட்டது.

அவர் முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக தன் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்த திருட்டு சம்பவம் இவ்வாண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடந்தது.

SQ899 விமானம் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு நோக்கி புறப்பட்டது. அதில் பெங் இருந்தார்.மற்றொரு பயணியான சிங்கப்பூர் நகைக்கடைக்காரர் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்ற பின் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்தார்.

அவர் தனது பையை மேல்நிலை பெட்டியில் வைத்திருந்தார்.


விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே திருடியுள்ளார். விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவரிடம் இருந்த தொகையை குறித்து குடிவரவு சோதனைச் சாவடியைக் கடந்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

தனது பணம் காணாமல் போனது குறித்து சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகு தான் அவர் உணர்ந்தார்.

விசாரணை நடைபெற்றது. பெங் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.