புலாவ் உபின் தீவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் புதிய திட்டம் அறிவிப்பு!!

புலாவ் உபின் தீவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் புதிய திட்டம் அறிவிப்பு!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புலாவ் உபின் தீவின் அடுத்த கட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் அப்பகுதியின் கலாச்சார ரீதியான இயற்கை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கம்பத்து வீடுகள் மறுசீரமைப்பு, உபின் பள்ளி, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் திட்டம் தீவின் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய அம்சங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.

இத்தீவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அந்தக் காலகட்டத்தின் கம்பத்து வீடுகள். தேசிய பூங்கா கார்ப்பரேஷன் திட்டத்தின் கீழ், காலியாக உள்ள ஐந்து கம்பத்து
வீடுகளை சீரமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும்.

மேலும் உபின் பள்ளியும் அங்கு அமைக்கப்படும்.தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உபின் தீவின் பரந்த புவியியல், கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றிய விவரங்களை அறிந்து கொள்வார்கள்.

உபின் தீவின் பாரம்பரியத்தை தொடர்ந்து கட்டியெழுப்புவதில் சமூகத்தின் பங்கு இருப்பதை உறுதிப்படுத்த இத்தகைய திட்டங்கள் உதவுகின்றன.