வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!!

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்...!!!

வியட்நாமில் பறவைக் காய்ச்சலுக்கு 47 புலிகள், 3 சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தைப்புலி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விலங்குகள் சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, H5N1 வகை A வைரஸால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

வியட்நாமில் லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் My Quynh safari பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள Vuon Xoai மிருகக்காட்சிசாலையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் (VNA) தெரிவித்துள்ளது.

விலங்கின் இறப்பு குறித்த விவரங்களை வழங்க உயிரியல் பூங்கா மறுத்துவிட்டது.

விலங்குகளுக்கு அருகில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சுவாசக் கோளாறுகள் கண்டறியப்படவில்லை.