சிங்கப்பூரர்களுக்கு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க நடைபெற்ற நிகழ்ச்சி!!

சிங்கப்பூரர்களுக்கு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க நடைபெற்ற நிகழ்ச்சி!!

சிங்கப்பூரில் அனைத்து வயதினரையும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் யீஷூன் விளையாட்டு நிலையத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உடற்பயிற்சி, நடை, ஓட்டம் விளையாட்டுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மக்கள் ஆர்வத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குடியிருப்புவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் நண்பர்ககளும் கலந்து கொண்டனர்.