இரவில் நடந்த விபத்து!! பறிபோன உயிர்கள்!!

பிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ள டீக்ஸீரா டி ஃப்ரீடாஸ் அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ரியோ டி ஜெனிரோவில் இருந்து போர்டோ செகுரோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.