கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!!

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு தங்கச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் மார்ச் 25ஆம் தேதி அன்று இரவு நடந்தது.

இந்த விபத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இறப்பு எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல மாதங்களாக இந்த தங்கச் சுரங்கம் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் அவர்கள் இவ்வாறு கூறினர்.

இந்த தளத்தை இயக்கிய நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.