சிங்கப்பூரில் தனது நண்பர்களை லாரியில் ஏற்றி சென்றபோது நேர்ந்த விபத்து!! பறிபோன 2 உயிர்கள்!!

சிங்கப்பூரில் தனது நண்பர்களை லாரியில் ஏற்றி சென்றபோது நேர்ந்த விபத்து!! பறிபோன 2 உயிர்கள்!!

சிங்கப்பூரில் ஜூரோங் சாலையில் லாரி ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததது.

இந்த விபத்துக்கு காரணமான 26 வயதான லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் தனது நண்பர்கள் ஏழு பேரை லாரியில் ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் லாரி ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக அவர்கள் கூறினர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதியதாக விசாரணையில் தெரியவந்தது.

லாரி ஓட்டுநர் மீது திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

அந்த நபருக்கு 31 மாதங்கள் வரை சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.