Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நிகழ்வு!வேலைப் பார்த்து கொண்டு இருக்கும்போதே நிகழ்ந்த விபத்து!வேலையிட மரணம் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

சிங்கப்பூரில் பிப்ரவரி,2-ஆம் தேதி Alexandra Terrace உள்ள Harbor Link கட்டடத்தில் கண்ணாடிக் கதவுகளை ஏற்றியிறக்கிய போது ஊழியர்கள் மூவர் மீது எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 53 வயதுடைய சிங்கப்பூர் ஊழியர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை 8 world கூறியது.இந்த ஆண்டு மட்டுமே வேலைப் பார்த்து கொண்டு இருந்த போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 2 ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

AGL Facade systems எனும் நிறுவனம் அதன் பாதுகாப்பு முறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.இதற்கென பாதுகாப்பு பணியாளரை நியமிக்க வேண்டும் என்று மனித வள அமைச்சகம் கூறியது.

இந்நிறுவனம் அதன் வேலைகளைத் தற்காலியமாக நிறுத்தும்படி மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டது.இவ்வாறு 8 world கூறியது.

இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நடக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அதே போல் நிறுவனத்தின் இயக்குனர்கள் நடந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் வலியுறுத்தியது.

இந்த விபத்து குறித்த விசாரணைத் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தது.