தனது 74 வயதுடைய மனைவியை கொலை செய்த 88 வயது முதியவர்!!

தனது 74 வயதுடைய மனைவியை கொலை செய்த 88 வயது முதியவர்!!

சிங்கப்பூர் ஜூன் 5 ஆம் தேதி(நேற்று) புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 74 வயதுடைய மனைவியை 88 வயதுடைய முதியவர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நள்ளிரவு 12.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

சம்பவ இடத்திலேயே 74 வயதுடைய பெண் இறந்து விட்டதாக மருத்துவ உதவியாளர் கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அதன்பின் சம்பவம் நடந்த இடத்திலேயே காவல்துறை 88 வயதுடைய Ridawi Morsudin – ஐ கைது செய்தது.

இன்று (ஜூன் 6) அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலையைச் செய்தது அவர் தான் என்று நிரூபனமானால் மரண தண்டனையை எதிர்நோக்குவார்.