சீனாவில் நிகழ்ந்த அதிசய சம்பவம்…!!! வைரலாகும் 3 சகோதரிகளின் கதை…!!!

சீனாவில் நிகழ்ந்த அதிசய சம்பவம்...!!! வைரலாகும் 3 சகோதரிகளின் கதை...!!!

சீனாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகள் ஒரே பல்கலைக்கழகத்தில் சேர உள்ளனர்.

அவர்கள் 3 பேரும் ஃபூச்சொவ் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் செய்தி வெளியானதும் தற்போது சீனா ஊடகங்களிலும் இவர்கள் குறித்து பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

ஹாங் யிலான், ஹாங் சிலான்,ஹாங் ஷெங்லான் ஆகிய மூவரும் 2005 இல் பிறந்தவர்கள் என்று SCMP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூவரும் வெவ்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர்.

3 சகோதரிகளும் இளம் வயதில் ஒரே பள்ளியில் படித்ததாகவும் தற்போது ஒரே பல்கலைக்கழகத்தில் சேர உள்ளது மேலும் மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்களது தாயார் தொடர்ந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி மூவரும் பல்கலைக்கழகத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ளார்.