கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பால்கனி இடிந்து விழுந்தது!! பலியான மூதாட்டி!!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பால்கனி இடிந்து விழுந்தது!! பலியான மூதாட்டி!!

பிலிப்பைன்சில் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று கத்தோலிக்க தேவாலயத்தின் மரத்தாலான பால்கனி இடிந்து விழுந்தது.

இதில் 80 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 53 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1994 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் பால்கனி 30 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த பால்கனி கரையான்களால் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பால்கனி இடிந்து விழுந்த போது சுமார் 400 பேர் தேவாலயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

சேதமடைந்த தேவாலயத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, அதை மூடுமாறு மேயர் உத்தரவு பிறப்பித்தார்.