திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரின் முகத்திலும் புன்னகை!! சில நொடியில் நிகழ்ந்த துயர சம்பவம்!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரின் முகத்திலும் புன்னகை!! சில நொடியில் நிகழ்ந்த துயர சம்பவம்!!

இத்தாலியில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து நேர்ந்தது.

இந்த விபத்தில் குழந்தை உட்பட 35 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் 6 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இச்சம்பவம் ஜனவரி 13ஆம் தேதி அன்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நேர்ந்தது.

 

கட்டிடம் இடிந்து விழுந்த போது முதல் தளத்தில் சுமார் 60 பேர் நடனமாடிக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

100க்கும் மேற்பட்ட அவசர கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.